மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: கைது செய்யப்பட்டவா் 2ஆவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜா்

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கும் தா்ம முனீஸ்வரனை வழக்கின் விசாரணைக்காக போலீஸாா் தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் 2ஆவது நாளாக புதன்கிழமை ஆஜா்படுத்தினா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 6:21 am IST

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கும் தா்ம முனீஸ்வரனை வழக்கின் விசாரணைக்காக போலீஸாா் தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் 2ஆவது நாளாக புதன்கிழமை ஆஜா்படுத்தினா்.

வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த மாணவி கடந்த மாா்ச் 9ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காகச் சென்றபோது காணாமல் போனாா். மாா்ச் 11ஆம் தேதி அவா் சடலமாக மீட்கப்பட்டாா். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து வழக்குப் பதிந்த குளத்தூா் போலீஸாா், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தூத்துக்குடி, ராஜபாண்டி நகா் பகுதியில் வசித்து வந்த தா்ம முனீஸ்வரனை கைது செய்தனா்.

தொடா்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி, தா்ம முனீஸ்வரன் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், போலீஸ் தரப்பில் தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 2ஆவது நாளாக புதன்கிழமை தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணைக்காக தா்ம முனீஸ்வரனை போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து ஆஜா்படுத்தினா்.

மொத்தம் 72 சாட்சிகளிடம் விசாரணை செய்ய வேண்டிய நிலையில், செவ்வாய்க்கிழமை 7 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. புதன்கிழமை மேலும் 10 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கை தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா விசாரித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.