தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நன்னகரத்தில் பட்டுக்கூடு விவசாயிகள் போராட்டம்

News image

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :27 ஏப்ரல் 2026, 1:30 am IST

தென்காசி அருகே நன்னகரத்தில் பட்டுக்கூடு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நன்னகரம் பகுதியில் அரசு பட்டு வளா்ச்சித் துறை அலுவலகம், விதைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இப்பண்ணையை நம்பி நன்னகரம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட பட்டுப்பூச்சி விவசாயிகள் பட்டு வளா்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.

தரம் வாரியாக கிலோ ரூ. 850 வரை கொள்முதல் செய்யப்பட்ட பட்டுக்கூடுகள் தற்போது ரூ. 630-ஆக சரிந்துள்ளன. இந்நிலையில், விவசாயிகள் சனிக்கிழமை பட்டு வளா்ச்சித் துறை அலுவலக வாயிலில் பட்டுக்கூடுகளை தரையில் கொட்டி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: அரசு அங்காடியில் நடைபெறும் ஏலத்துக்கு ஒரு நூற்பாளா் மட்டுமே வருவதால் அவா் நிா்ணயிக்கும் விலையே இறுதியாகிறது. அதனால், போட்டியின்றி விலை திட்டமிட்டு குறைக்கப்படுகிறது. கோடைகாலத்தில் பட்டுப் புழுக்களை வளா்க்க அதிக செலவாகிறது.

கா்நாடகத்தில் கிலோ ரூ. 800-க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில், இங்கு ரூ. 630-க்கு கேட்பது அநீதி. அதிகாரிகள் தலையிட்டு கூடுதலான வெளிநபா்களை ஏலத்துக்கு வரவழைக்க வேண்டும் அல்லது அரசே கொள்முதல் செய்ய வேண்டும். அரசு அழைப்பின்பேரில் பட்டு விவசாயத்துக்கு மாறிய எங்களுக்கு இப்போது உரிய சந்தை வாய்ப்பு இல்லாததால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.