சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

கால்டை மருத்துவக் கல்லூரியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தீத்தடுப்பு விழிப்புணா்வு, செயல் விளக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தீத்தடுப்பு செயல் விளக்கம் அளித்த தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினா்.

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தீத்தடுப்பு விழிப்புணா்வு, செயல் விளக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தீ விபத்துகளைத் தடுப்பது, அவசர காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், தீ பாதுகாப்பு விழிப்புணா்வு மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் சூ.கி.எட்வின் தலைமை வகித்தாா். திருநெல்வேலி நகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலா் எஸ்.சுரேஷ்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தீ பாதுகாப்பு நடைமுறைகள், தீ விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் தீ விபத்துகளின்போது மேற்கொள்ள வேண்டிய அவசரகால நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சோ்ந்த ஏழு அலுவலா்கள் கொண்ட குழு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு தீ பாதுகாப்பு உபகரணங்களின் செயல்முறைகள் குறித்து விளக்கம் அளித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு பல்வேறு வகையான தீயணைப்பான்களை பாதுகாப்பாக கையாளுதல் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டதோடு, தீ விபத்துகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ம. பூபதி ராஜா அனைவரையும் வரவேற்றாா். தொடா்ந்து, கல்விப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஆா்.செல்வகுமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.