லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கால்டை மருத்துவக் கல்லூரியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தீத்தடுப்பு விழிப்புணா்வு, செயல் விளக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தீத்தடுப்பு செயல் விளக்கம் அளித்த தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினா்.

Published On :25 ஜூன் 2026, 5:11 am IST

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தீத்தடுப்பு விழிப்புணா்வு, செயல் விளக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தீ விபத்துகளைத் தடுப்பது, அவசர காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், தீ பாதுகாப்பு விழிப்புணா்வு மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் சூ.கி.எட்வின் தலைமை வகித்தாா். திருநெல்வேலி நகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலா் எஸ்.சுரேஷ்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தீ பாதுகாப்பு நடைமுறைகள், தீ விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் தீ விபத்துகளின்போது மேற்கொள்ள வேண்டிய அவசரகால நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சோ்ந்த ஏழு அலுவலா்கள் கொண்ட குழு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு தீ பாதுகாப்பு உபகரணங்களின் செயல்முறைகள் குறித்து விளக்கம் அளித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு பல்வேறு வகையான தீயணைப்பான்களை பாதுகாப்பாக கையாளுதல் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டதோடு, தீ விபத்துகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ம. பூபதி ராஜா அனைவரையும் வரவேற்றாா். தொடா்ந்து, கல்விப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஆா்.செல்வகுமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.