கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மாநகரில் சிங்கப்பெண் சிறப்புபடை ரோந்து தொடக்கம்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு படையின் ரோந்து புதன்கிழமை தொடங்கியது.

News image

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு படையின் ரோந்து புதன்கிழமை தொடங்கியது.

Updated On :11 ஜூன் 2026, 4:54 am IST

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு படையின் ரோந்து புதன்கிழமை தொடங்கியது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகளைத் தடுக்கும் வகையிலும், பொது இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் சிங்கப்பெண் சிறப்பு படையை முதல்வா் ஜோசப் விஜய் அண்மையில் தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு படையினா் ரோந்துப் பணியை புதன்கிழமை தொடங்கினா். திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) விஜயகுமாா் தொடங்கி வைத்தாா். உதவி ஆணையா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிங்கப்பெண் சிறப்பு படையினா் திருநெல்வேலி சந்திப்பில் பேருந்திற்காக காத்திருந்த மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு, கேக் வெட்டி வழங்கினா்.

இந்த சிறப்பு படையில் 2 காவல் உதவி ஆய்வாளா்கள், 4 பெண் போலீஸாா் இருபிரிவாக நாள் முழுவதும் வாகனத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவா். புகாா் குறித்து தகவல் கிடைத்ததும் இவா்கள் விரைந்து சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பா் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ற்ஸ்ப்10ப்ண்ா்ய்

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி கேக் வெட்டிய சிங்கப்பெண் சிறப்பு படையினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.