முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பெண்ணிடம் பாலியல் சீண்டல்: சிங்கப்பெண் படையிடம் சிக்கிய ஓட்டுநா்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓட்டுநரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் பிடித்து பாளையங்கோட்டை போலீஸில் ஒப்படைத்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:52 am IST

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓட்டுநரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் பிடித்து பாளையங்கோட்டை போலீஸில் ஒப்படைத்தனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா்(49). அவசர ஊா்தி ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உறவினரின் சிகிச்சைக்காக உடன் வந்த இளம்பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகர சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த சிறப்புப்படையினா் பாஸ்கரை பிடித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து பாஸ்கரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இச்சம்பவம் திருநெல்வேலி மாநகர சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் முதல் நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.