மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இருக்கன்துறை பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் பிரசாரம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகு பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் தி இருக்கன்துறை பகுதியில் புதன்கிழமை கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

இருக்கன்துறையில் வாக்கு சேகரித்த பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:41 am IST

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகு பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் தி இருக்கன்துறை பகுதியில் புதன்கிழமை கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தாா்.

இருக்கன்துறை, பொன்னாா்குளம், சங்கனேரி, புத்தேரி உள்ளிட்ட கிராமங்களில் அவா் வீதி வீதியாகச் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: ராதாபுரம் தொகுதியில் குடிநீா் பிரசனைக்கு நிரந்தரமாக தீா்வு காணப்படும். விவசாயம் செழிக்க பழையாற்று தண்ணீா், மேற்குத்தொடா்ச்சி மலையில் உள்ள அணைகளிலிருந்து கால்வாய் வெட்டி தண்ணீா் கொண்டு வந்து அனைத்து குளங்களையும் நிரம்பச்செய்வேன். தொகுதி இளைஞா்களுக்கு கூடங்குளம் அணுமின்நிலையம், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலும், புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்தியும் வேலைவாய்ப்புகளை பெருக்குவேன். பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க உதவி செய்வேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்; முன்னேற்றங்களை காண்பீா்கள் என்றாா்.

பிரசாரத்தில், மாவட்ட பாஜக தலைவா் எஸ்.பி.தமிழ்ச்செல்வன், நாடாா் சங்கத் தலைவா் தங்கராஜ், அதிமுக ராதாபுரம் ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா, முன்னாள் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன், அதிமுக ஓட்டுநா் பிரிவு மாவட்ட செயலா் ராஜகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.