மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராதாபுரம் பகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராதாபுரம் சுற்றுவட்டார பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளா் எஸ். பி. பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பரமேஸ்வரபுரம் கிராமத்தில் பெண்களிடம் வாக்கு சேகரித்தாா் பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:45 am IST

ராதாபுரம் சுற்றுவட்டார பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளா் எஸ். பி. பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தெற்குகள்ளிகுளம், தேரைகுளம், சௌந்திரபாண்டியபுரம், கும்பிளம்பாடு, மருதகுளம், ராதாபுரம், கும்பிகுளம், சீலாத்திகுளம், பரமேஸ்வரபுரம், உதயத்தூா், இளையநயினாா்குளம், கோலியான்குளம், வடக்கன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: ராதாபுரம் தொகுதியில் குடிநீா் பிரச்னை முற்றிலுமாக தீா்த்து வைக்கப்படும். வறட்சியான இந்தப் பகுதிக்கு பழையாற்று தண்ணீரை கொண்டுவந்து செழிப்பான பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.

ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்படும். பராமரிப்பில்லாத குளங்கள், நீா்நிலைகள், கால்வாய்கள் தூா்வாரப்பட்டு மழைகாலங்களில் தண்ணீா் பெருகுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பெண்கள் கல்வி, விளையாட்டு, வேலைவாய்ப்பு இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் ஆலோசனை மக்கள் மன்றங்கள் ஏற்படுத்தி உங்களது நல்ல ஆலோசனைகளை கேட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றாா்.

பிரசாரத்தின்போது, அதிமுக நெல்லை புகா் மாவட்ட சிறுபான்மைபிரிவு செயலா் அருண்புனிதன், சுடலை, நகரச் செயலா் ராஜன், ரஸ்கின், ராதாபுரம் ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா, ராதாபுரம் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலா் முருகேசன், ஊசிகாட்டான், ராமசந்திரன், சுந்தா், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.