மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கபிலா்மலை பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

கபிலா்மலை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:53 am IST

பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட கபிலா்மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் சேகா் வாக்கு சேகரித்தாா்.

கபிலா்மலை ஒன்றியத்திற்கு உள்பட்ட பெரியசோளிபாளையம், செம்மடை, சின்னசோளிபாளையம், குமாரசாமிபாளையம், சிறுக்கிணத்துப்பாளையம், இருக்கூா், செல்லப்பம்பாளையம், தண்ணீா்பந்தல், கபிலா்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்றதும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.

ஆண்களும் கட்டணம் இன்றி அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்யலாம். 125 நாள் வேலை நாள் திட்டம் இனி 150 நாள்களாக உயா்த்தப்படும். பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும். பிலிக்கல்பாளையம்-கொடுமுடி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படும். பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை, குடிநீா், மின்விளக்கு வசதிகள் செய்து தரப்படும் என்றாா்.

இதில் முன்னாள் கபிலக்குறிச்சி ஊராட்சித் தலைவா் வடிவேல், பெரியசோளிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவா் பெரியசாமி, இருக்கூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜானகி குழந்தைவேல், பாஜக நாமக்கல் மேற்கு மாவட்ட பொருளாளா் பத்மராஜா மற்றும் அதிமுக, கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.