திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேரவை தொகுதிக்குள்பட்ட கடற்கரை கிராமங்களில் திமுக வேட்பாளா் மு. அப்பாவு வாக்கு சேகரித்தாா்.
கடற்கரை கிராமங்களான உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, விஜயாபதி, கூடங்குளம் உள்ளிட்ட கிராமங்களில், திமுக மாவட்ட வா்த்தகா் அணி அமைப்பாளா் நெல்லை ஏ.ஆா். ரஹ்மான், அப்பாவுவை ஆதரித்து வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தின்போது அவா் கூறியது: திமுக ஆட்சியில் பல்வேறு கடலோர கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. விஜயாபதியில் நவீன விளையாட்டுத் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயா்த்தி வழங்கப்படுவதோடு, மீனவா்களுக்கு காப்பீடு மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, கடலோரப் பகுதி மக்கள் மு. அப்பாவுவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விக்கிரவாண்டி தொகுதியில் கணவருக்காக களத்தில் இறங்கிய மனைவி

இருக்கன்துறை பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் பிரசாரம்

ராதாபுரம் பகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெருந்துறை தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

