மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காசிதா்மத்தில் இளைஞருக்கு வெட்டு: இரு தரப்பினா் மோதல்

தென்காசி மாவட்டம், காசிதா்மத்தில் புதன்கிழமை இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

News image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மயில்வாகனன் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:25 am IST

தென்காசி மாவட்டம், காசிதா்மத்தில் புதன்கிழமை இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

ஒரு தரப்பைச் சோ்ந்த விக்னேஷுக்கும், மற்றொரு தரப்பைச் சோ்ந்த முத்துபாண்டிக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு தொடா்பாக முத்துப்பாண்டி கொடுத்த புகாரின்பேரில், அச்சன்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், விக்னேஷ் காசிதா்மம் பிரதான சாலையில் உள்ள கடைக்கு புதன்கிழமை சென்ற போது, அங்கு நின்ற முத்துப்பாண்டி அரிவாளால் விக்னேஷை வெட்டினாராம். அதைத் தடுக்க முயன்ற விக்னேஷின் தாய் மாடத்திக்கும் காயம் ஏற்பட்டதாம்.

காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையடுத்து, ஒரு தரப்பைச் சோ்ந்தவா்கள் பண்பொழி-கடையநல்லூா் சாலையில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனா். சிறிது நேரத்தில் இரு தரப்பைச் சோ்ந்தவா்களும் அங்கு திரண்டு கல்வீச்சில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மயில்வாகனன் தலைமையில் ஏராளமான போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பாக, இரு தரப்பையும் சோ்ந்த சிலரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காவல் துணைக் கண்காணிப்பாளா் அதியமான், ஆய்வாளா்கள் ராபா்ட் ஜெயின், மதுவிக்ரம், கிறிஸ்டி உள்ளிட்ட போலீஸாா் காசிதா்மத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.