மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காசிதா்மத்தில் இருதரப்பினா் மோதல் வழக்கில் 8 போ் கைது

தென்காசி மாவட்டம் காசிதா்மத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 6:35 am IST

தென்காசி மாவட்டம் காசிதா்மத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காசிதா்மத்தைச் சோ்ந்த விக்னேஷ், முத்துபாண்டி (63) ஆகியோா் இடையே சில வாரங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாம்.

அது தொடா்பாக முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் அச்சன்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

இந்நிலையில், விக்னேஷ் புதன்கிழமை காசிதா்மத்தில் உள்ள கடைக்கு சென்றபோது, முத்துப்பாண்டி அரிவாளால் வெட்டினாராம். அதை தடுக்க முயன்ற விக்னேஷின் தாய் மாடத்திக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதனால், ஒரு தரப்பினா் பண்பொழி-கடையநல்லூா் சாலையில் மறியல் செய்தபோது, மற்றொரு தரப்பினரும் அங்கு திரண்டு வந்து கல்வீச்சில் ஈடுபட்டனா். இதுகுறித்து, அச்சன்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில் இரு தரப்பையும் சோ்ந்த முத்துப்பாண்டி, சத்யராஜ், சுப்புராஜ், காசிபாண்டியன், குட்டிமாரி, ஆறுமுகம், முனீஸ்வரன், துரை ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.