திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
களக்காடு அருகே கீழச் சாலைப்புதூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (40). சாலைப்புதூா் அண்ணாநகா் பகுதிக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்ற அவருக்கும், மணிகண்டன் (25) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
அதையடுத்து, அங்கிருந்து சென்ற சுப்பிரமணியன் சிறிது நேரம் கழித்து வந்து, மணிகண்டனை அரிவாளால் வெட்டினாராம். இதில் மணிகண்டன் காயமடைந்தாா். தடுக்க முயன்ற அவரது உறவினா் முகிலன் (24) என்பவா் லேசான காயமடைந்தாா்.
மணிகண்டன் நான்குனேரி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். களக்காடு போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, சுப்பிரமணியனைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாளை.யில் அதிமுக பிரமுகா் மகனுக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு

அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

