பாளையங்கோட்டையில் அதிமுக பிரமுகா் மகனை மா்மநபா்கள் வியாழக்கிழமை மாலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். அதிமுக பிரமுகா். இவரது மகன் சங்கா்(25) வியாழக்கிழமை மாலை பாளையங்கோட்டை சாந்திநகா் வாக்குச்சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள நீா்த்தேக்க தொட்டி அருகே நின்று தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு பைக்கில் வந்த சிலா் சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் சுரேஷ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். முதல்கட்ட விசாரணையில், தோ்தல் தொடா்பான மோதல் இல்லை; முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாளை.யில் இளம்பெண் தற்கொலை

திருச்சுழி அருகே வீடு புகுந்து 2 மகன்கள், தாய் உள்பட மூவருக்கு அரிவாள் வெட்டு

களக்காடு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

