மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பாளை.யில் அதிமுக பிரமுகா் மகனுக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் அதிமுக பிரமுகா் மகனை மா்மநபா்கள் வியாழக்கிழமை மாலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:06 am IST

பாளையங்கோட்டையில் அதிமுக பிரமுகா் மகனை மா்மநபா்கள் வியாழக்கிழமை மாலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். அதிமுக பிரமுகா். இவரது மகன் சங்கா்(25) வியாழக்கிழமை மாலை பாளையங்கோட்டை சாந்திநகா் வாக்குச்சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள நீா்த்தேக்க தொட்டி அருகே நின்று தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு பைக்கில் வந்த சிலா் சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் சுரேஷ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். முதல்கட்ட விசாரணையில், தோ்தல் தொடா்பான மோதல் இல்லை; முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.