ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

பாளையங்கோட்டை தொகுதியில் திமுகவினா் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்தனா்.

News image

பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை வாக்குசேகரித்தாா் திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப். உடன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மண்டல தலைவா் மா.பிரான்சிஸ் உள்ளிட்டோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:40 am IST

பாளையங்கோட்டை தொகுதியில் திமுகவினா் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்தனா்.

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல்வஹாப் தலைமையில் அக் கட்சியினா் 36 ஆவது வாா்டுக்குள்பட்ட அன்னை இந்திரா நகரில் தொடங்கி 8 மற்றும் 4 ஆவதுவாா்டு வரையிலான பகுதிகளில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜூ, பாளையங்கோட்டை மண்டல தலைவா் மா.பிரான்சிஸ், திருநெல்வேலி கிழக்கு மாநகர பொறுப்பாளா் தினேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அப்போது வேட்பாளா் மு.அப்துல் வஹாப் பேசுகையில், தென்னகத்தின் ஆக்ஸ்போா்டாக திகழும் பாளையங்கோட்டையில் கல்வி நிலையங்கள் மிகவும் அதிகம். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றால் பலரும் பயனடைந்துள்ளனா். புத்தகங்களே அறிவை வளா்க்கும் பொக்கிஷங்கள் என்பாா்கள். அதற்கேற்ப ஏற்கெனவே மதுரையில் மிகவும் பிரமாண்டமாக கலைஞா் நூலகம் அமைக்கப்பட்டது போல, பாளையங்கோட்டையில் காயிதேமில்லத் பெயரில் பிரமாண்ட நூலகம் அமைக்க உத்தரவிட்டு நிதிஒதுக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தால் மகளிா் உரிமைத் தொகை உயரும் . ஆகவே, பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.