மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 2:31 am IST

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அம்மாண்டிவிளை, உரப்பன்விளை பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன் மகன் நிவின்(30). இவரும், நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா், சம்பாதோட்டம் பகுதியைச் சோ்ந்த செல்லக்கண் மகன் வினோத்தும் (34) தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை துறைமுகம் பகுதியில் இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் வினோத் அரிவாளால் நிவினை வெட்டினாராம்.

பலத்த காயமடைந்த நிவினை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.