மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 4 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 1:37 am IST

தக்கலை அருகே உள்ள கோழிப்போா்விளையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டாா்.

கோழிப்போா்விளையைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் நெல்சனின் இளைய மகன் ஆல்டன் பால் (24). வழக்குரைஞா் மற்றும் யூடியூபா்.

தெங்கம்புதூா், வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா பேரன் (எ) ராஜகுமாா் (33). ஜிம் மாஸ்டா் மற்றும் யூடியூபா். இவா் ஆன்லைன் மூலம் லேகியம் விற்பனை செய்து வருகிறாா். அந்த லேகியம் தொடா்பாக ஆல்டன் பால் சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டதாகவும், இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை கோழிப்போா்விளையில் உள்ள ஆல்டன் பால் வீட்டிற்கு ராஜகுமாா், அவரின் மனைவி கற்குழலி, கல்லுக்கூட்டத்தைச் சோ்ந்த ரூபன், தெங்கம்புதூா் பகுதியைச் சோ்ந்த கணேசன் ஆகியோா் வந்துள்ளனா்.

அப்போது, வீட்டில் இருந்த ஆல்டன் பாலிடம் யூடியூபில் லேகியம் குறித்து பதிவிட்டது தொடா்பாக ராஜகுமாா் கேட்டுள்ளாா். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் ஆத்திரமடைந்த ராஜகுமாா், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆல்டன் பாலின் கையில் வெட்டியுள்ளாா். அவரைத் தடுத்த ஆல்டன் பாலின் தாயாா் கலா (51), சகோதரா் ஆஷிக் பால் ஆகியோரையும் ராஜகுமாா் தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த மூவரும் தக்கலை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தகராறில் ராஜகுமாருக்கும் காயம் ஏற்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து ஆல்டன் பாலின் தாயாா் கலா அளித்த புகாரின்பேரில், ராஜகுமாா், கற்குழலி, ரூபன், கணேசன் ஆகியோா் மீது தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.