ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மாடுகளுக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் மீது வழக்கு

விருத்தாசலத்தை அடுத்த ஊ.மங்கலம் அருகே 8 மாடுகளை அரிவாளால் வெட்டியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :12 ஏப்ரல் 2026, 1:17 am IST

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த ஊ.மங்கலம் அருகே 8 மாடுகளை அரிவாளால் வெட்டியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருத்தாசலம் வட்டம், ஊ.மங்கலத்தை அடுத்த காட்டுகூனங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி செல்வராஜ் (56), ஹோமியோபதி மருத்துவா் மற்றும் கால்நடைகள் வளா்த்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஆதவ முருகன் ஜவஹருக்கும் இடையே விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச குழாய் கொண்டு செல்வது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியன்று அந்தோணி செல்வராஜ் தனக்குச் சொந்தமான 8 மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிட்டாா். இந்த மாடுகள் ஆதவ முருகன் ஜவஹா் வயலுக்கு சென்றது. இதனால், ஆத்திரமடைந்த அவா் 8 மாடுகளையும் அரிவாளால் வெட்டி காயப்படுத்தினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.