மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெருவிளை பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாகா்கோவில் பெருவிளை பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

News image

நாகா்கோவில் பெருவிளை பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:27 am IST

நாகா்கோவில் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின் வெள்ளிக்கிழமை பெருவிளை பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கினாா்.

ராஜலட்சுமி நகா், கிறிஸ்டோபா் நகா், அம்மன் கோயில், கோட்டவிளை, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நடுக்காட்டு இசக்கி அம்மன் கோயில், நெசவாளா் காலனி, ஹனிபா நகா் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: திமுக அறிவித்துள்ள தோ்தல் அறிக்கையில், பெண்களுக்கான இல்லத்தரசி திட்டத்தின் மூலம் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கு ரூ. 8 ஆயிரத்துக்கு கூப்பன் வழங்கப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட உள்ளது. இது போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்த உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜன், மாநகராட்சி மேயா் (பொ) மேரிபிரின்சிலதா, மாநகர திமுக செயலா் ப. ஆனந்த், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், இளைஞா் அணி சி.டி. சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.