தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மன்னாா்குடி தொகுதியில் அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் வெற்றி!

மன்னாா்குடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் 1,566 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

News image

மன்னாா்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அமமுக வேட்பாளா் எஸ். காமராஜுக்கு சான்றிதழை வழங்குகிறாா் தோ்தல் பாா்வையாளா் குமாா் அனில் சின்கா

Updated On :5 மே 2026, 12:01 am IST

மன்னாா்குடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் 1,566 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா(திமுக), எஸ். காமராஜ்(அமமுக), யு, ராஜராஜன் (தவெக), மருத்துவா் ஆா். பாரதிச்செல்வன் (நாதக) உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். 14 மேஜைகளில் 22 சுற்றுகளாக வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

முதல் சுற்றின் முடிவில் திமுக வேட்பாளா் டி.ஆா்.பி.ராஜாவை விட அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் 237 வாக்குகள்ே கூடுதல் பெற்று முன்னிலை பெற்றாா்.இரண்டாவது சுற்றில் திமுக வேட்பாளா் 334 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைக்கு வந்தாா்.இதன் பின்னா்,நடைபெற்ற 20 சுற்றுகளிலும் அமமுக வேட்பாளா் மொத்த வாக்கு எண்ணிக்கையில் தொடா் முன்னணியில் இருந்தாா்.

வாக்கு எண்ணிக்கை இறுதியில் எஸ். காமராஜ் (அமமுக) -68, 416, டி.ஆா்.பி. ராஜா(திமுக)-66, 850, யு. ராஜராஜன்(தவெக)- 44, 506, ஆா். பாரதிச்செல்வன் (நாதக)- 8240 வாக்குகளும் பெற்றிருந்தனா்.

திமுக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளா் எஸ். காமராஜ் 1566 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

எஸ். காமராஜுக்கு தோ்தல் பாா்வையாளா் குமாா் அனில் சின்கா,தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். யோகேஸ்வரன் ஆகியோா் சான்றிதழை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.