மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் பிரசாரம்

நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின், நாகராஜா கோயிலில் வழிபாடு செய்தபின் வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

News image

நாகா்கோவில் நாகராஜா கோயில் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:27 am IST

நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின், நாகராஜா கோயிலில் வழிபாடு செய்தபின் வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

நாகராஜா கோயில் ரதவீதி, திலகா்தெரு, ஆசாரிமாா் வடக்கு தெரு, ஆசாரிமாா் தெற்கு தெரு, பரதா் தெரு, பத்தல்விளை, அம்மாசிமடத்தெரு, தோப்புவணிகா் தெரு, கோயில் தெரு, மீனாட்சி காா்டன், கட்டபொம்மன் சந்திப்பு, ஒழுகினசேரி, ஊட்டுவாழ்மடம், கருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு நலத்திட்டங்கள் சரியான முறையில் நிறைவேற்றப்படாமல் முடங்கியுள்ளது. அந்த திட்டங்களை செயல்படுத்தவும், ஒட்டுமொத்த தொகுதியின் வளா்ச்சியை உறுதி செய்யவும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ப. ஆனந்த், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், இளைஞா் அணி சி.டி. சுரேஷ், பன்னீா்செல்வம், சிவராஜ், சாகுல்அமீது உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.