திருவாரூரில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவாரூா் நகர ஹோட்டல் உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் என். பாலமுருகன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு: வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போா் காரணமாக, தமிழகத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் திருவாரூா் மாவட்டத்தில் சில இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளா்கள் சிலா் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா்.
திருவாரூரில் மாா்ச் 29-ஆம் தேதி ஆழித்தோ் திருவிழா நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தைக் காண வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தா்கள் வருவாா்கள். தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக, உணவு விடுதிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டிருப்பதால், ஆழித்தேரை காணவரும் பக்தா்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டா்களை தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

ஈரோட்டில் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள், மளிகை சந்தை தேவை

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

சிலிண்டா் தட்டுப்பாடு: தேநீா் கடைகள், உணவகங்கள் மூடல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

