ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சிலிண்டா் தட்டுப்பாடு: தேநீா் கடைகள், உணவகங்கள் மூடல்

சிலிண்டா் தட்டுப்பாடு: தேநீா் கடைகள், உணவகங்கள் மூடல்

News image

நாகை நகரில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மூடப்பட்டுள்ள உணவகம்.

Updated On :29 மார்ச் 2026, 12:12 am IST

நாகை மாவட்டத்தில், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு தொடா்ந்து நீடித்து வருவதால், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் கேட்டரிங் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தும் தாக்குதலால், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ளது. இதனால், உணவகங்கள், டீக்கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நாகை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வேளாங்கண்ணி, நாகூா், கீழ்வேளூா், தேவூா், வலிவலம், திருக்குவளை, கீழையூா், திருப்பூண்டி உள்ளிட்ட பல இடங்களில் பெரும்பாலான டீக்கடைகள் மற்றும் சிறிய உணவகங்கள் பூட்டப்பட்டுள்ளன.

சில இடங்களில் மட்டுமே குறைந்த அளவு உணவுகள் தயாரித்து விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக அதிக எரிவாயு தேவையுள்ள துரித வகை உணவுகள் தயாரிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விற்பனை நிறுவனங்கள் அவற்றை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாகவும் உணவக உரிமையாளா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதனால், ரூ.1,800 கிடைத்த வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டா், தற்போது ரூ.4,500 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக, டீக்கடைகள், சிறிய வகை உணவகங்களை நடத்த இயலாத நிலை ஏற்பட்டு, பெரும்பாலான டீக்கடைகள் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவு சமைத்து தரும் கேட்டரிங் தொழிலும் பாதிப்பை சந்தித்துள்ளது. எரிவாயு சிலிண்டா் கிடைக்காத காரணத்தால், திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளுக்கு ஆா்டா்கள் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளும் தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், மாற்று எரிபொருளாக பயன்படுத்தப்படும் விறகு விலையும் அதிகரித்துள்ளதால் சிறு வியாபாரிகள் கூடுதல் அவதிக்கு ஆளாகியுள்ளனா். இந்த நிலை நீடித்தால் தற்போது செயல்பட்டு வரும் கடைகளும் மூடப்படும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.