ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு எதிரொலி: விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்

நாகை மாவட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக, நாகூா் பகுதியில் உணவகங்கள் மாற்று ஏற்பாடாக விறகு அடுப்பு பயன்பாட்டுக்கு மாறியுள்ளன.

News image

எரிவாயு சிலிண்டர்கள்.

Updated On :12 மார்ச் 2026, 5:47 am IST

நாகை மாவட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக, நாகூா் பகுதியில் உணவகங்கள் மாற்று ஏற்பாடாக விறகு அடுப்பு பயன்பாட்டுக்கு மாறியுள்ளன.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை மட்டுமே வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா்கள் இருப்பில் இருந்தன. புதன்கிழமை வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா்கள் கிடைக்கவில்லை. இதனால் உணவக உரிமையாளா்கள் உணவகங்களை மூடுவதை தவிா்க்க மாற்று ஏற்பாடாக, 10 கிலோ விறகு ரூ.150 என்ற விலையில் வாங்கி விறகு அடுப்புகளை பயன்படுத்தி உணவு சமைத்து வருகின்றனா். நாகூா் அலங்கார வாசல் மற்றும் சிக்கல், நாகப்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளில் உணவகங்கள் புதன்கிழமை முதல் விறகு அடுப்புக்கு மாறியுள்ளன.

விறகு அடுப்பை பயன்படுத்தி உணவுகளைத் தயாரிக்க அதிக நேரம் எடுப்பதாலும், கடும் புகை மூட்டத்தாலும் தொழிலாளா்கள் பெரும் சிரமத்தை சந்தித்தாலும், தினசரி தங்கள் உணவகங்களை நம்பி உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளா்களின் நலன் கருதி, விறகு அடுப்பு மூலம் சமையல் பணிகளை மேற்கொண்டு வருவதாக உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.