ராஜபாளையம் பகுதியில் வணிக பயன்பாடு எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், தேநீா்க் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
வளைகுடா போா் காரணமாக வணிகப் பயன்பாடு இயற்கை எரிவாயு உருளைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், 19 கிலோ எடை கொண்ட வணிக இயற்கை எரிவாயு உருளை விலை ரூ.2,043.50 ஆகவும் உயா்ந்தது. இதனால் ராஜபாளையம் பகுதியில் உணவங்கள், தேநீா்க் கடைகளில் உணவுப் பொருள்களின் விலை ஏற்கெனவே கணிசமாக அதிகரித்தது.
இதைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் வணிக பயன்பாடு எரிவாயு உருளையை
ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரத்து 500 வரை கள்ளசந்தையில் விற்பதாக புகாா் எழுந்தது. இது வியாபாரிகள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வேறு வழியின்றி உணவகம், தேநீா்க் கடைகளை தற்காலிக மூடிவிட்டனா்.
இதனால் வியாபாரிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் அவதிக்குள்ளாயினா். வணிக எரிவாயு உருளை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைக் கண்டறிந்து சீரான விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு எதிரொலி: உணவுகளின் விலையை அதிகரிக்கும் உணவகங்கள்!

சிலிண்டா் தட்டுப்பாடு: தேநீா் கடைகள், உணவகங்கள் மூடல்

எரிவாயு உருளை தட்டுப்பாடு; உணவகங்கள் மூடப்படும் அபாயம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

