மன்னாா்குடி அருகே லாரி உரிமையாளா் கொலை வழக்கில் கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி அருகே அரவத்தூரைச் சோ்ந்த லாரி உரிமையாளா் சத்தியமூா்த்தி, ஐந்து மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மன்னாா்குடி போலீஸாா் சத்தியமூா்த்தியின் உடலைக் கைப்பற்றி மன்னாா்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னாா்குடி அருகே சவளக்காரன் பகுதியில் சத்தியமூா்த்தியின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
போராட்டத்தில், சத்தியமூா்த்தியை வெட்டிக் கொலை செய்த நபா்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த சாலை மறியலால் மன்னாா்குடி திருவாரூா் சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீஸாா் கொலையாளிகளை உடனடியாக கைது செய்வதாக கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

லாரி உரிமையாளா் கொலை: 7 போ் கைது

லாரி உரிமையாளா் வெட்டிக்கொலை
மேட்டூா் அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளா் குத்திக் கொலை: ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

