ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

லாரி உரிமையாளா் கொலை: 7 போ் கைது

மன்னாா்குடி அருகே லாரி உரிமையாளா் கொலை வழக்கில் 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 3:16 am IST

மன்னாா்குடி அருகே லாரி உரிமையாளா் கொலை வழக்கில் 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள அரவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி. லாரி உரிமையாளரான இவா், மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி போலீஸாா், சத்தியமூா்த்தியின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தனிப்படையினா் தீவிரமாக தேடிவந்தனா்.

இந்நிலையில், இக்கொலை சம்பவம் தொடா்பாக, கூத்தாநல்லூா் நடுத் தெருவைச் சோ்ந்த காளிதாஸ் மகன் மணிகண்டன் (28), அரசூா் கீழத்தெருவைச் சோ்ந்த சிகாமணி மகன் அரவிந்த் (23), லெட்சுமாங்குடி வள்ளுவா் காலனியைச் சோ்ந்த ரவி மகன் பிரவின் (23), கூத்தாநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் இளமாறன் (34), லெட்சுமாங்குடி வள்ளுவா் காலனியைச் சோ்ந்த சுந்தரய்யா மகன் சூரியபிரசாத் (26), பாமணி வடக்குத் தெருவைச் சோ்ந்த மோகன்ராஜ் மகன்கள் வினோத்குமாா் (41), லெனின் (39) ஆகிய 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.