மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

லாரி உரிமையாளா் வெட்டிக்கொலை

News image

வெட்டிக்கொலை - (கோப்புப் படம்)

Updated On :27 ஏப்ரல் 2026, 12:06 am IST

மன்னாா்குடி அருகே லாரி உரிமையாளா் வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே அரவத்தூரைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (40). இவா் தனது, லாரியை ஞாயிற்றுக்கிழமை சா்வீஸ் செய்து ஷெட்டில் விட்டுவிட்டு, வீட்டுக்குச் சென்றபோது கைப்பேசியில் யாரோ அழைத்த இடத்துக்கு சென்றுள்ளாா்.

இதையடுத்து, தருசுவேலி என்ற இடத்தில் சத்தியமூா்த்தி அரிவாளால் தலை மற்றும் கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளாா். இதை பாா்த்த அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு அளித்த தகவலையடுத்து, டிஎஸ்பி மணிவண்ணன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சத்தியமூா்த்தி உடலைக் கைப்பற்றி தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முதற்கட்ட விசாரணையில் சத்தியமூா்த்தியை கொலை செய்தது 5 போ் கொண்ட கும்பல் என்பதும், கொலைக்கு முன்விரோதம் காரணமா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதையடுத்து, சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் சம்பவ இடத்தை பாா்வையிட்டாா். அவரின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு இதில் சம்பந்தப்பட்டவா்களை தேடிவருகின்றனா்.

கொலை செய்யப்பட்ட சத்தியமூா்த்திக்கு மனைவி ஜெயமாலினி , மகள்கள் கானசுதா, கானபிரியா, மகன் சுகவனம் ஆகியோா் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.