தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

மன்னாா்குடி அருகே முன்விரோத தகராறு காரணமாக இளைஞரை உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகாரில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 6:19 am IST

மன்னாா்குடி அருகே முன்விரோத தகராறு காரணமாக இளைஞரை உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகாரில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கடந்த மாதம் பெரியக்குடி பாலத்தில் அமா்ந்து கோட்டூா் சந்நதிதெரு சிவானந்தம் மகன் மணிகண்டன் (27) தனது நண்பா்கள் இரண்டு பேருடன் சோ்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த பெரியக்குடி பகுதியைச் சோ்ந்த சிலா், மது குடித்தவா்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறியபோது இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த பெரியக்குடி ஆற்றங்கரைதெரு சரவணன் மகன் நவீன்தரன் (20) இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளாா்.

இந்நிலையில், ஏப். 17- ஆம் தேதி கோட்டூருக்கு நவீன்தரன் வந்தபோது, அவரை வழிமறித்த மணிகண்டன் மற்றும் இரண்டு போ் முன்பு நடைபெற்ற பிரச்னை குறித்து பேசி தகராறு செய்து, உருட்டுக்கட்டையால் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பியோடிவிட்டனராம்.

இதுகுறித்து கோட்டூா் காவல்நிலையத்தில் நவீன்தரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.