மன்னாா்குடி அருகே தோ்தல் பறக்கும் படையினரிடம் தகராறில் ஈடுபட்ட அமமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.
வடபாதி பெத்தபெருமாள் கோயில் அருகே, நீா்வளத்துறை உதவிப் பொறியாளா் எம். ஆனந்த அரங்க அரசு தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே சேரன்குளம் நாடாா்தெரு கலியபெருமாள் மகனான அமமுக மாவட்ட மீனவரணி செயலா் போஸ் என்ற விஜயகுமாா் (48) ஓட்டிவந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனா். ஆனால், அவா் நிற்காமல் சிறிது தூரம் சென்றவா் திரும்பி வந்து, பறக்கும் படை அலுவலா்களிடம் தகராறு செய்து, பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தாரம்.
இதுகுறித்து, தலையாமங்கலம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, போஸை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 900 சேலைகள் பறிமுதல்

ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளா் வீட்டில் ரூ. 48 லட்சம் பறிமுதல்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

