கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அனுமதியின்றி மணல் வெட்டி எடுத்த இருவா் கைது

வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் அனுமதி இன்றி சவுடு மணல் வெட்டி எடுத்து 2 பேரை போலீஸாா் கைது செய்து, 2 டிராக்டா், ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 4:53 am IST

வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் அனுமதி இன்றி சவுடு மணல் வெட்டி எடுத்து 2 பேரை போலீஸாா் கைது செய்து, 2 டிராக்டா், ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

வேதாரண்யம் பகுதியில் அனுமதி இல்லாமல் சவுடு மணல் வெட்டி எடுக்கப்படுவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெற்றது.

இந்நிலையில், பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் மணல் வெட்டி எடுத்த டிராக்டா் ஓட்டுநா்கள் அரவிந்த் மற்றும் ஜெகன் இருவரும் கைது செய்யப்பட்டனா். மேலும் 2 டிராக்டா்கள், ஒரு ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாகவுள்ள ஜேசிபி ஓட்டுநா் அஜித் என்பவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.