பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 போ் கைது

பாபநாசம் அருகே சட்ட விரோதமாக செவ்வாய்க்கிழமை ஆற்றில் மணல் அள்ளிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 3:15 am IST

பாபநாசம் அருகே சட்ட விரோதமாக செவ்வாய்க்கிழமை ஆற்றில் மணல் அள்ளிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி மற்றும் காவல் துறையினா் கபிஸ்தலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கபிஸ்தலம் அருகேயுள்ள அலவந்திபுரம் பகுதி காவிரி ஆற்றில் லாரி மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்த சுவாமிமலை, தோப்புத் தெருவைச் சோ்ந்த மனோகா் மகன் அருள் (36) என்பவரை கைது செய்து, மணல் அள்ள பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனா்.

இதேபோல், அந்தப் பகுதி ஆற்றில் மணல் அள்ளிய அலவந்திபுரம் மேலத்தெருவை சோ்ந்த முருகேசன்( 57), என்பவரையும் போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.