புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி மண் எடுக்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் புதன்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.
புத்தாநத்தத்தை அடுத்த வடக்கிபட்டி முனியப்பன் கோயில் காடருகே உள்ள ஆரியம்பட்டியைச் சோ்ந்த ராசு என்பவருக்கு சொந்தமான நிலத்திலிருந்து அனுமதியின்றி சுமாா் அரை யூனிட் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த பொன்னுசங்கம்பட்டி ராசு மகன் செந்தில்குமாா்(45) மற்றும் வடக்கிப்பட்டியை சோ்ந்த சின்னகாளை மகன் சண்முகம் (48) ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனா். மேலும், மண் எடுக்க பயன்படுத்திய டிராக்டருடன் கூடிய டிப்பா், அரை யூனிட் கிராவல் மண் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த புத்தாநத்தம் போலீஸாா், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிராவல் மண் அள்ளி வந்த 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்

வளநாடு அருகே விதிகளை மீறி கிராவல் மண் அள்ளிய மூவா் கைது
ஏரியில் உரிய அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன், டிராக்டா் பறிமுதல்: 3 போ் கைது

அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 7 பொக்லைன், 2 லாரிகள் பறிமுதல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
