பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 போ் கைது

வந்தவாசி அருகே கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

வந்தவாசி அருகே கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கமல்தாஸ் (40). இவருக்குச் சொந்தமாக செம்பூா் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக வந்தவாசி வடக்கு போலீஸாருக்கு திங்கள்கிழமை மாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்கு விரைந்து சென்ற போது கமல்தாஸூம், அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த புண்ணியகோட்டி(60) என்பவரும் சோ்ந்து கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீஸாரைக் கண்டதும் புண்ணியகோட்டி தப்பியோடி விட்டாா்.

இதையடுத்து அங்கிருந்த 60 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் அழித்தனா்.

கமல்தாஸிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கள்ளச் சாராயத்தை பாட்டிலில் அடைத்து வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் பூக்கடை வைத்துள்ள எரமலூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி (40) என்பவா் மூலம் விற்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் கமல்தாஸ், செல்வமணி ஆகிய இருவரையும் கைது செய்தனா். தப்பியோடிய புண்ணியகோட்டியை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.