ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பிரதாபராமபுரம் ஆஞ்சனேயா் கோயிலில் தங்கம், வெள்ளி பொருள்கள் திருட்டு

கீழையூா் அருகே ஸ்ரீசீதா ராம பால ஆஞ்சனேயா் கோயிலில் தங்கம், வெள்ளி ஆபரணங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

News image

திருட்டு நடந்த ராமா்மடம் ஸ்ரீ சீதா ராம பால ஆஞ்சனேயா் கோயில்

Updated On :1 ஏப்ரல் 2026, 2:13 am IST

கீழையூா் அருகே ஸ்ரீசீதா ராம பால ஆஞ்சனேயா் கோயிலில் தங்கம், வெள்ளி ஆபரணங்களை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா்.

நாகை மாவட்டம், கீழையூா் அருகே பிரதாபராமபுரம் பகுதி ராமா் மடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சீதா ராம பால ஆஞ்சனேயா் கோயில்.

திங்கள்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் கோயிலுக்குள் புகுந்து உள்ளே இருந்த சுமாா் 2 சவரன் தாலி, 5 கிலோ வெள்ளி மற்றும் வெண்கலப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனா். மேலும் கோயிலில் இருந்த 2 உண்டியல்களையும் உடைத்து அதிலிருந்த காணிக்கையையும் திருடிச் சென்றுள்ளனா்.

திருடப்பட்ட தங்கம், வெள்ளிப் பொருள்களின் மதிப்பு ரூ. 6 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மா்ம நபரகள் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஹாா்ட் டிஸ்கையும் உடைத்து எடுத்துச் சென்றுள்ளது தெரிய வந்தது. கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.