ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோயில்களில் ராம நவமி விழா

குடியாத்தம் சந்தப்பேட்டை அருள்மிகு சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் ராம நவமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

குடியாத்தம் சந்தப்பேட்டை சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ராமா், சீதாதேவி, லட்சுமணா். (வலது) பிச்சனூா் பலமநோ் சாலையில் உள்ள வீரஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ராமா், சீதாதேவி.

Updated On :28 மார்ச் 2026, 2:43 am IST

குடியாத்தம் சந்தப்பேட்டை அருள்மிகு சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் ராம நவமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி காலை, ராமா், சீதாதேவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றன. மகா தீபாராதனைக்குப்பின் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் மாதம் 5- ஆம் தேதி வரை நாள்தோறும் மாலை 6 மணியளவில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அதேபோல், பிச்சனூா், பலமநோ் சாலையில் அமைந்துள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மூலவா் ஆஞ்சனேயா் வெள்ளிக் கவசஅலங்காரத்தில் அருள்பாலித்தாா். கோயில் முகப்பில் உற்சவா் ராமா், சீதாதேவி சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.