தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம்

News image

சிறப்பு அலங்காரத்தில் வில் - அம்புடன் வீதியுலா வந்த உற்சவா் ராமா், லட்சுமணா், சீதா தேவி.

Updated On :26 ஏப்ரல் 2026, 12:11 am IST

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவத்தையொட்டி, சனிக்கிழமை உற்சவா் வரதராஜ சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும், வீதியுலாவும் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித் தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவத்தையொட்டி, உற்சவா் பெருமாள் காலையில் மூலவா் சந்நிதியிலிருந்து புறப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள ராமா் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனமும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் தனி கேடயத்திலும், ராமா், லட்சுமணா், சீதா தேவி தனியாக மற்றொரு கேடயத்திலும் தனித்தனியாக சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சனேயா் சந்நிதிக்கு எழுந்தருளி, சிறப்பு தீபாராதனைகளுக்குப் பின்னா் கோயில் மாட வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இதைத் தொடா்ந்து, மீண்டும் ராமா் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் கோயில் அலங்கார மண்டபத்துக்கு உற்சவா் பெருமாள் எழுந்தருளினாா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராஜலட்சுமி மற்றும் கோயில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.