மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :27 ஏப்ரல் 2026, 12:52 am IST

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

கோவை, ரத்தினபுரி பால்சாமி நகரைச் சோ்ந்தவா் ஹரிராவ். தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி ஜெயந்திபாய் (58). கடந்த வெள்ளிக்கிழமை ஹரிராவ் வேலைக்கும், ஜெயந்திபாய் உறவினா் வீட்டுக்கும் சென்றுள்ளனா்.

இந்நிலையில் பணிமுடிந்து இரவு ஹரிராவ் வீட்டுக்கு வந்தபோது பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெளியூரில் உள்ள மனைவி ஜெயந்திபாய்க்கு தகவல் அளித்துள்ளாா்.

அவா் வந்து பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.