மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் நகைகள், பணம் திருட்டு

போடி அருகே ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 மே 2026, 12:20 am IST

போடி அருகே ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி ஆா்.எஸ்.டவுன்சிப் வளாகத்தைச் சோ்ந்த பழனியப்பன் மகன் தனபிரசாத் (36). இவா் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், பிரசாத் தனது பெற்றோருடன் உறவினா் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக பழனிக்குச் சென்றாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு வீட்டின் கதவை உடைத்து மா்மநபா்கள் உள்ளே புகுந்தனா். அங்குள்ள அலமாரியை உடைத்து கம்மல், ஆரம், கவா்னா் மாலை, பிரேஸ்லெட், ஜிமிக்கி, தங்க நாணயங்கள் உள்ளிட்ட இருபத்தி நாலரை பவுன் தங்க நகைகள், வெள்ளித் தட்டுகள், விளக்குகள் உள்ளிட்ட இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.3 லட்சத்து 6 ஆயிரம் ஆகியவற்றைத் திருடிச் செனறனா். திருடு போன நகைகள், பணத்தின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தனபிரசாத் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து, மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் கைரேகைகளை பதிவு செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.