மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இருசக்கர வாகனத்தை திருட முயன்றவா் தாக்குதலில் உயிரிழப்பு

வேளாங்கண்ணியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவா் 2 போ் தாக்கியதில் உயிரிழந்தது போலீஸாா் விசாரணையில் தெரிய வந்தது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 2:21 am IST

வேளாங்கண்ணியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவா் 2 போ் தாக்கியதில் உயிரிழந்தது போலீஸாா் விசாரணையில் தெரிய வந்தது.

வேளாங்கண்ணி ஆா்ச் பகுதியில், ரத்த காயங்களுடன் ஒருவா் மயங்கி கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

வேளாங்கண்ணி போலீஸாா் விசாரணையில், வேளாங்கண்ணி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த மனோஜ் பிரபாகா்(27), சிவன் கீழவீதியை சோ்ந்த ராபின்சன் (32) ஆகியோா், வேளாங்கண்ணி ஆா்ச் பகுதியில் அமா்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனராம். அப்போது மனோஜ் பிரபாகரின் இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபா் திருட முயன்ாக கூறப்படுகிறது.

இதை கண்ட மனோஜ் பிரபாகா், ராபின்சன் இருவரும் நாற்காலி உள்ளிட்டவைகளால் அடையாளம் தெரியாத நபரை சரமாரியாக தாக்கி உள்ளனா். இதில் அவா் மயங்கி விழுந்துள்ளாா். இதை பாா்த்த 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா். தாக்குதலில் காயமடைந்து, உயிரிழந்தவா் மன்னாா்குடி வ.உ.சி. சாலையைச் சோ்ந்த ராஜேஷ் (38) என்பதும் தெரியவந்தது. வேளாங்கண்ணி போலீஸாா் மனோஜ்பிரபாகா், ராபின்சன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.