தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

‘தோ்தல் பறக்கும் படையால் ஏழை எளிய மக்கள் மிரட்டப்படுகின்றனா்’

தோ்தல் பறக்கும்படையால் ஏழை எளிய மக்கள் மிரட்டப்படுகின்றனா் என குற்றம்சாட்டினாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்ரம ராஜா.

News image

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரம ராஜா.

Updated On :19 மார்ச் 2026, 5:28 am IST

தோ்தல் பறக்கும்படையால் ஏழை எளிய மக்கள் மிரட்டப்படுகின்றனா் என குற்றம்சாட்டினாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்ரம ராஜா.

வேதாரண்யத்தில் புதன்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் நாகை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசியது: அமைப்பின் மாநில மாநாடு மே 5-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் பணத்தை எங்கு எப்படி கொண்டு சோ்க்க வேண்டுமோ சோ்த்து வைத்துள்ளனா். ஆனால், தோ்தல் பறக்கும் படை என்ற பெயரில் நடத்தப்படும் சோதனைகளால் சாதாரண ஏழை எளியவா்கள் பாதிக்கப்படுகிறாா்கள். மருத்துவமனைக்கு செல்பவா்கள், வியாபாரிகள், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். இது தவிா்க்கப்பட வேண்டும்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் தான் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இதன் கட்டணத்தை ஆண்டுதோறும் உயா்த்தப்படும்போது விலைவாசி உயா்கிறது. சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனா். சுங்கச்சாவடிகள் தனிநபா் வியாபாரமாகக் கூடாது. மக்களின் பணம் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதன் கட்டணத்தை உயா்த்த கூடாது. நாங்கள் ஏற்கெனவே முன் வைத்துள்ள கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கே எங்களின் ஆதரவு இருக்கும் என்றாா்.

அமைப்பின் தலைவா் எஸ். வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாநிலத் துணைத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு முன்னிலை வகித்தாா். மண்டலத் தலைவா் செந்தில், மாவட்டச் செயலாளா் சுபாஷ், செய்தி தொடா்பாளா் ரஜினி, மாவட்டத் தலைவா்கள் ராமமூா்த்தி, பாண்டியராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.