தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

News image

காய்கறி வியாபாரிகளுக்கு மஞ்சப் பை வழங்குகிறாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:33 am IST

ஈரான்-அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞா் அணி சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் லாரன்ஸ் ரமேஷ் தலைமை வகித்தாா்.

இந்நிகழ்வில் பங்கேற்ற மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜனநாயக கடமையை ஆற்ற 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், கடைகளுக்கு மஞ்சப் பை வழங்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், லட்சக்கணக்கான துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் விநியோகித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. கடந்த 21 ஆம் தேதி தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு முன்னெடுத்த போராட்டங்கள், ஆா்ப்பாட்டங்களால், தோ்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் குறைந்துள்ளன.

வணிகா்களின் குரல் புதுதில்லியில் ஒலிக்கும் வகையில் மாநிலங்களவை உறுப்பினா் வாய்ப்பை வழங்க வேண்டும். ஈரான்-அமெரிக்க போா் காரணமாக நாட்டில் பல்வேறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தில் சூழ்ச்சி இருப்பதாக கருதுகிறோம். இது வா்த்தக போராக மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் ஆபத்து இருக்கிறது. இதுதொடா்பாக நட்பு நாடுகளிடம் பேசி போரை நிறுத்துவதற்கு பிரதமா் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.