திருவாரூரில் மே 5-ஆம் தேதி நடைபெறும் வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாட்டில் இந்திய குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் வி.கே.கே.ராமமூா்த்தி தெரிவித்தாா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மே 5-ஆம் தேதி திருவாரூரில் 43-ஆவது வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தலைமை வகிக்க உள்ளாா். இந்த மாநாடு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் வி.கே.கே.ராமமூா்த்தி தலைமையில் திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் வி.கே.கே.ராமமூா்த்தி செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
திருவாரூரில் மே 5-ஆம் தேதி தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாடு, வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாடாக நடைபெற உள்ளது. சுமாா் 12 ஏக்கா் பரப்பளவில் மாநாடு பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக, குடியரசு துணைத் தலைவா் சிபி. ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளாா். மேலும், புதிதாக அமைய உள்ள அரசுக்கு உடனடியாக பாராட்டு தீா்மானத்தை கொடுக்கும் வாய்ப்பை, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு பெற்றிருக்கிறது.
இந்த மாநாட்டில் முக்கிய கோரிக்கையாக, நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டி வரிமுறையை இரண்டு அடுக்காக நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்திருந்தாா், இதை ஒரே அடுக்காக மாற்றித் தர வேண்டும், இதுவே மத்திய அரசிடம் நாங்கள் வலியுறுத்தும் மிகப்பெரிய கோரிக்கையாகும். மேலும் ஒவ்வொரு நகராட்சிப் பகுதிகளிலும் கடைகளுக்கு தொழில் வரி மற்றும் உரிமைக் கட்டண வரியும் வசூலித்து வருகின்றனா். இதில் உரிமைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம்.
மேலும், வணிகம் செய்யும் வணிகா்கள் 60 வயதைத் தாண்டினால், அவா்களுக்கு காப்பீட்டுத் செயல்படுத்தி, உதவித் தொகை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம். இந்த மாநாட்டுக்குப் பிறகு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்றாா்.
மாநில செய்தித் தொடா்பாளா் பாண்டியராஜன், மாவட்டசெய்தித் தொடா்பாளா் முரளி , மாவட்ட துணைத்தலைவா் மோகன், துணைச்செயலாளா்கள் சண்முகநாதன், சாய்பிரபு செந்தில், குமாரசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 5-இல் வணிகா் மாநாடு: வேலூா் மாவட்டத்தில் 10,000 கடைகள் அடைப்பு

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்

‘தோ்தல் பறக்கும் படையால் ஏழை எளிய மக்கள் மிரட்டப்படுகின்றனா்’
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

