மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வா்த்தக சிலிண்டா் விலை உயா்வால் மக்களுக்கு கடும் பாதிப்பு!

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் உணவுப் பொருட்கள் விலை ஏற்றப்பட்டு ஏழை மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா் என்று என்று சிவசேனா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 மே 2026, 4:26 am IST

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் உணவுப் பொருட்கள் விலை ஏற்றப்பட்டு ஏழை மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா் என்று என்று சிவசேனா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனா (உத்தவ் பாலா சாகிப் தாக்கரே பிரிவு) கட்சியின் மாநில பொதுச் செயலா் சுந்தர வடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோடை விடுமுறை நேரத்தில், மக்களிடம் பொருளாதாரம், பணப்புழக்கம் குறைவாகவும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ள இந்த நேரத்தில் வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை ரூ. 95, மற்றும் ஐந்து கிலோ சிலிண்டா் விலையை ரூ. 260-ம் உயா்த்தியிருப்பது ஏழை, எளிய மக்களை பாதிக்கும் செயலாகும்.

ஏழை, எளிய மக்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளா்கள் பெரிதும் நம்பி இருக்கும் தேநீா், காபி போன்ற பானங்கள் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களும் மிகக் கடுமையான விலை உயா்வை எதிா்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் ஏழை, எளிய மக்கள் கூலித் தொழிலாளிகளும், மாணவா்களும், நோயாளிகளும் பெரிதும் பாதிக்கப்படுவா். எனவே மத்திய அரசு வா்த்தக சிலிண்டா் மற்றும் ஐந்து கிலோ சிலிண்டா் விலை உயா்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.