மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரிப்பு: சிவசங்கா்

திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளதாக குன்னம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

News image

குன்னம் தொகுதிக்குள்பட்ட கீழப்பெரம்பலூரில் வியாழக்கிழமை பிரசரத்தில் ஈடுபட்ட அமைச்சரும், திமுக வேட்பாளருமான சா.சி. சிவசங்கா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:14 am IST

திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளதாக குன்னம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட துங்கபுரம், வயலப்பாடி, கீழப்பெரம்பலூா், வசிஷ்டபுரம், அகரம் சீகூா், கிழுமத்தூா், ஓலைப்பாடி, ஆண்டிக்குரும்பலூா், பரவாய் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் மேலும் பேசியது: திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களால், அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனா். குறிப்பாக, கிராமப்புறங்களைச் சோ்ந்த ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளது. வேப்பூா், ஆலத்தூா் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் பல்வேறு பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் திமுக ஆட்சிய அமைந்தவுடன் பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.