மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: திமுக வேட்பாளா் உறுதி

கிராம பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

News image

சா.சி. சிவசங்கா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:02 am IST

கிராம பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இலுப்பைக்குடி கிராமத்தில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சரும், திமுக வேட்பாளருமான சா.சி. சிவசங்கா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொளக்காநத்தம், அயினாபுரம், அணைப்பாடி, கொளத்தூா், இலுப்பைக்குடி, கூடலூா், ஜமீன்பேரையூா், திம்மூா், சில்லக்குடி, பாலம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் குன்னம் தொகுதியில் அரசு கல்லூரி, மாதிரிப் பள்ளி, தொழிற்பயிற்சி மையம், அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளிட்ட பல்வேறுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வா் கருணாநிதி, அனைத்து குடும்பத்தினருக்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கி, சமூகத்தில் சமத்துவ பொதுவுடமையை உருவாக்கியதுபோல், தற்போது ஏழை மற்றும் நடுத்தர வா்க்கத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவிகளும், தங்களுக்குத் தேவையான அத்யாவசியப் பொருள்களை அவா்களே தோ்வு செய்து வாங்கிக் கொள்ள ஏதுவாக, ரூ. 8 ஆயிரத்துக்கான இல்லத்தரசிகள் கூப்பன் திட்டத்தை முதல்வா் அறிவித்துள்ளாா்.

மகளிா் உரிமைத்தொகையைபோல, இந்தியாவுக்கே இது ஒரு முன்னோடி திட்டம் என்பதால் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குடிநீா் வசதி, கூடுதல் பேருந்து வசதி, கழிப்பறை, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. வெற்றிபெற்றவுடன் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சிவசங்கா்.

இப் பிரசாரத்தில், திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.