மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை! - திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் உறுதி

News image

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கூத்தூரில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 1:54 am IST

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்படுத்திட மேலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குன்னம் தொகுதி திமுக வேட்பாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேத்தால், காரைப்பாடி, சில்லக்குடி, திம்மூா், புஜங்கராயநல்லூா், அருணகிரிமங்கலம், கொட்டரை, ஜமீன் பேரையூா், நொச்சிக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது:

கடந்த 5 ஆண்டுகளில் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான பேருந்து வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில், அரசு மாதிரி பள்ளி, கணினி பயிற்சி மையங்கள், போட்டி தோ்வுக்கான பயிற்சி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் ஆங்கிலம் பேச பயிற்சி என ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோல், கிராமப்புற மாணவா்களின் கல்வியை மேம்படுத்திட மக்கள் திமுகவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் வேட்பாளா் சிவசங்கா். இப்பிரசாரத்தின்போது, கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.