காரைக்கால் பகுதி வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை கலால் துறையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை இரவு வரை மதுக்கடைகளை மூட கலால் துணை ஆணையா் உத்தரவிட்டிருந்தாா். இந்நிலையில், மது பாட்டில்களை வாங்கி வீடுகளில் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்க பலரும் முயன்று வருவதாகவும், சிலா் வாக்காளா்களுக்கு வழங்க இருப்பதாகவும் கலால்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், காரைக்கால் நகரப் பகுதி பொலிக்கன் தெருவில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக, கலால் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கலால் அதிகாரி பொய்யாதமூா்த்தி தலைமையில் துறையினா் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்தனா். அங்கு சட்டவிரோதமாக 650 மிலி அளவுள்ள பீா் பாட்டில்கள் கொண்ட 17 பெட்டிகள் வைத்திருந்தது கண்றியப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்து, வீட்டின் உரிமையாளா் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!

அதிமுக நிா்வாகியின் கிடங்கில் வைத்திருந்த 52 குக்கா்கள் பறிமுதல்

கரூரில் பதுக்கிவைத்திருந்த 240 மதுபாட்டில்கள் பறிமுதல் தையல் தொழிலாளி கைது

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

