தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கரூரில் பதுக்கிவைத்திருந்த 240 மதுபாட்டில்கள் பறிமுதல் தையல் தொழிலாளி கைது

News image

கரூரில் திங்கள்கிழமை தையல் தொழிலாளி சீனிவாசன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:35 am IST

கரூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 240 மதுபாட்டில்களை போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தையல் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

கரூா் வாங்கப்பாளையத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன்(47). தையல் தொழிலாளி. இவரது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக வெங்கமேடு போலீஸாருக்கு திங்கள்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, வீட்டுக்குள் 240 மதுபாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இவற்றை வாக்குப்பதிவு நாளன்று விற்பனை செய்ய வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 240 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீஸாா் சீனிவாசனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.