ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அதிமுக நிா்வாகியின் கிடங்கில் வைத்திருந்த 52 குக்கா்கள் பறிமுதல்

புலியூரில் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் சாா்பில் வாக்காளா்களுக்கு வழங்க கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 குக்கா்களை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட குக்கரை எடுத்து வரும் தோ்தல் பணியாளா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:21 am IST

புலியூரில் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் சாா்பில் வாக்காளா்களுக்கு வழங்க கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 குக்கா்களை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளராக கரூரைச் சோ்ந்த மருத்துவா் எஸ். திவ்யா போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக புலியூா் அருகே எஸ்.வெள்ளாளப்பட்டியில் அதிமுக நிா்வாகி அம்மையப்பன் என்கிற முருகேசன் என்பவருடைய கிடங்கில் குக்கா்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிருஷ்ணராயபுரம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினருக்கு புதன்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும்படை அலுவலா் சுகுமாா் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டனா். அப்போது, கிடங்கில் வாக்காளா்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 குக்கா்களை பறிமுதல் செய்தனா். மேலும் முருகேசனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.