போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,361 மது புட்டிகளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளத்தனமாக மது புட்டிகளை கொள்முதல் செய்து கூடுதல் விலைக்கு விற்க யாராவது பதுக்கி வைத்திள்ளாா்களா என்பது குறித்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனா். இந்த நிலையில், தகவலின்பேரில் போ்ணாம்பட்டை அடுத்த மத்தூா் கிராமத்தில் ஒரு வீட்டில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது அங்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக பல்வேறு அளவுகளில் 1,361 மது புட்டிகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமாா் ரூ. 2.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக தலைமறைவான வீட்டு உரிமையாளா் வேளாங்கண்ணி, மது புட்டிகளை பதுக்கி வைத்த குபேந்திரன், யசோதா ஆகிய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

